ஆப்நகரம்

திரும்ப திரும்ப தாக்கும் பாகிஸ்தான்; திருப்பி திருப்பி அடிக்கும் இந்திய ராணுவம்

இந்திய எல்லையில் அமைந்துள்ள அர்னியா பகுதியில் பாகிஸ்தான் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது.

TNN 12 May 2017, 9:14 am
ஜம்மு: இந்திய எல்லையில் அமைந்துள்ள அர்னியா பகுதியில் பாகிஸ்தான் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது.
Samayam Tamil pakistan violated ceasefire in jammu kashmirs arnia between 7 730 am today
திரும்ப திரும்ப தாக்கும் பாகிஸ்தான்; திருப்பி திருப்பி அடிக்கும் இந்திய ராணுவம்


ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து, பல்வேறு காரணங்களும் அவை நிறுத்தப்பட்டன. தொடர் அத்துமீறலால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று கூறும் அளவிற்கு, காலங்கள் நகர்ந்து செல்கின்றன. இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் இந்திய எல்லையான அர்னியா பகுதியில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

இதற்கிடையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியதாகவும், அதில் பாகிஸ்தானியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. அதுதொடர்பாக இந்திய தூதரை நேரில் வரவழைத்து, பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள பாகிஸ்தானிற்கான இந்திய தூதர், பாகிஸ்தான் ராணுவம் தான் பீரங்கி தாக்குதல் நிகழ்த்தியது என்றும், தற்காத்துக் கொள்ள இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

Pakistan violated ceasefire in Jammu & Kashmir's Arnia between 7-7:30 AM today.

அடுத்த செய்தி