ஆப்நகரம்

IAF Strikes Pakistan: இந்திய மிராஜ் 2000 விமானத்தை பார்த்து பயந்தோடிய தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் போர் விமானம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்க வந்த பாகிஸ்தான் பயந்தோடி உள்ளது

Samayam Tamil 26 Feb 2019, 11:30 am
புதுடெல்லி : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்க வந்த பாகிஸ்தான் பயந்தோடி உள்ளது.
Samayam Tamil f16


இந்தியா - பாகிஸ்தான் எல்லை ஓரம் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தி அழித்துள்ளனர்.

கடந்த 14ம் தேதி ஜம்மு கஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், துணை ராணுவப்படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 40க்கும் அதிகமான துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து இருநாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்தது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ராணுவத்திற்கு முழு உஷார் நிலை- போர் பதற்றம்

பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதலில் 300க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் முகாம் மீது விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தி இந்தியா பதிலடி

பயந்தோடிய பாக் விமானம்:
இந்நிலையில், இந்திய விமானப்படை மிராஜ் 2000 ரக விமானத்தை வைத்து தாக்குதல் நடத்தியது. அப்போது இந்திய விமானங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் F16 ரக போர் விமானங்கள் வந்ததாகவும், ஆனால் இந்தியாவின் மிராஜ் 2000 ரக விமானத்தை பார்த்து பயந்து மீண்டும் திரும்பி சென்றுவிட்டதாக செய்தி நிறுவனம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாக்., பயங்கரவாதிகளை அழித்த மிராஜ்2000 விமானம் பற்றிய முழு தகவல்கள்..!

நாம் தாக்கினால் இந்தியா நம் மீது 20 குண்டுகள் வீசி அழித்து விடும் - பாக் முன்னாள் அதிபர் முஷாரஃப்!

அடுத்த செய்தி