ஆப்நகரம்

பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கருப்பு நிறத்திற்கு தடை; போலீசார் அதிரடி!

பலமு: பிரதமரின் நிகழ்ச்சியில் கருப்பு நிறத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Jan 2019, 5:35 pm
ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் வரும் 5ஆம் தேதி பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil Modi


அதாவது யாரும் கருப்பு நிற ஆடைகள், ஷால், கால் சட்டை, கோட், ஸ்வட்டர், மஃப்ளர், டை, சாக்ஸ், ஷூக்கள், பைகளை பயன்படுத்தக் கூடாது. இதுதொடர்பான உத்தரவை பலமு எஸ்பி இந்திரஜித் மகாத்மா பிறப்பித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பிரதமர் மோடி வருகையின் போது கருப்பு கொடி காட்டத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை காரணமாக கருப்பு நிறத்திற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி