ஆப்நகரம்

ஆதாருடன் பான் எண் இணைக்க 5வது முறையாக கால நீட்டிப்பு

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு 5வது முறையாக நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 1 Jul 2018, 10:10 am
ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு 5வது முறையாக நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Samayam Tamil Aadhaar Pan Link


மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரித்தாக்கல் செய்வதற்காக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்றும் இதனை இணைப்பதற்கான காலக்கெடுவை 2019 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த சட்டத்தின் படி பான் காா்டுடன் ஆதாா் எண்ணை இணைக்க உத்தரபிடப்பட்டது. எனினும் இதில் பல நடைமுறை சிக்கல்கள் எழுந்ததால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் பான் எண்ணுடன் ஆதாா் இணைப்பதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு மாா்ச் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு நேரடி வரி வருவாய் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி