ஆப்நகரம்

சுரங்கப் பணியாளர்கள் கண்டுப்பிடித்த வைரம் ரூ. 2.55 கோடிக்கு ஏலம் போன அதிசியம்

பெரிய வைரக்கல் ஒன்று ரூ. 2.55 கோடி மதிப்பிற்கு ஏலம் போன சம்பவம் அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.

Samayam Tamil 30 Dec 2018, 7:39 pm
மத்தியப் பிரதேசத்தில் பெரியளவிலான வைரக்கல் ரூ. 2.55 கோடிக்கு ஏலம் போன சம்பவம் அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது. இது வைரத்தை கண்டுப்பிடித்த இரண்டு சுரங்க பணியாளருக்கு கிடைக்கப்பெற்ற புத்தாண்டு பரிசு என பலரும் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil வைரத்தை கண்டுப்பிடித்து கோடீஸ்வரர்களாக சுரங்கப் பணியாளர்கள்


இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பன்னா மாவட்டத்தில் நடைபெற்ற சுரங்க பணிகளின் போது இரண்டு பணியாளர்கள் 42.9 கேரட் மதிப்பிலான வைர கல்லை கண்டுப்பிடித்தனர்.

தற்போது இந்த வைரக்கல் ஏலம் விடப்பட்டுள்ளது. ஒரு கேரட் வைரத்தின் மதிப்பு ரூ. 6 லட்சம் என விற்பனையாகி வரும் நிலையில், 42.9 கேரட் வைரமான இது ரூ. 2.55 கோடிக்கு ஏலம் போனதாக செய்தி தெரிவித்துள்ளது.

ஜான்சி பகுதியில் உள்ள பிரபல நகைக் கடை உரிமையாளர் இந்த வைரத்தை வாங்கியுள்ளதாக, ஏலம் நடத்தியவர்கள் தகவல் தெரிவித்துளனர். மேலும், ஏலப் பணத்தை பணியாளர்கள் இருவரும் இரண்டு பங்குகளாக பிரித்துக்கொள்வார்கள் என அவர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி