ஆப்நகரம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 தேதி கூடுகிறது!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 29 தேதி முதல் தொடங்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது

Samayam Tamil 5 Jan 2021, 5:03 pm
மத்திய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் இவை இரண்டும் சேர்த்து பிப்ரவரி முதல் வாரத்திலேயே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அந்த வகையில், நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்தவும், மார்ச் 8ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையில் மீண்டும் சிக்கல்: அடுத்த தேதி அறிவிப்பு!

முன்னதாக, கொரோனா காரணமாக தாமதமாக தொடங்கி முன் கூட்டியே நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்த நிலையில், கொரோனாவை காரணம் காட்டி, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை மத்திய அரசு ரத்து செய்தது. ஆனால், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவை தொடர்பான விவாதத்தை தவிர்க்கும் பொருட்டு மத்திய அரசு குளிர்காலக் கூட்டத் தொடரை ரத்து செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்க்து.

அடுத்த செய்தி