ஆப்நகரம்

தோல்விகளுக்கு கட்சி தலைமை தான் பொறுப்பு; மோடியை மறைமுகமாக சாடிய கட்கரி!

புதுடெல்லி: மோடியை விமர்சிக்கும் வகையில் நிதின் கட்கரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 Dec 2018, 7:39 pm
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் பாஜகவிற்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது 3 மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மற்ற 2 இடங்களில் மாநிலக் கட்சிகளே வென்றன.
Samayam Tamil Nitin-Gadkari


இதனால் பாஜகவிற்கு இனி இறங்கு முகம் தான் என்று பலரும் கருதினர். ஆனால் இது வெற்றிகரமான தோல்வி என்று கூறி தமிழிசை சமாளித்தார். இந்நிலையில் புனேவில் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் சங்கம் லிமிடெட் சார்பாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஒரு வெற்றிக்கு பலர் சொந்தம் கொண்டாடுவர். ஆனால் ஒரு தோல்வி வந்துவிட்டால், யாரும் பொறுப்பேற்பதில்லை. பிறர் மீது குற்றம்சாட்டுகின்றனர்.

தோல்விக்கும் பொறுப்பேற்பவர் தான் தலைமை வகிக்க வேண்டும். அப்போது தான் தலைவர்கள் உண்மையுடன் இருக்க முடியும். பாஜக, காங்கிரஸ் ஆட்சிகளில் மாறி, மாறி விசாரணை நடத்தப்படுகிறது. நாடு மிகவும் மோசமாகி விட்டது.

நன்றாக வேலை செய்தால் ஆதரிக்கவும், மோசமாக வேலை செய்தால் தண்டனையும் வழங்க வேண்டும். அவர் நமக்கு வேண்டியவராக இருந்தாலும் சரி என்றார்.

இதன்மூலம் பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியை மத்திய அமைச்சர் ஒருவரே விமர்சித்திருப்பது அக்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி