ஆப்நகரம்

ரயிலில் உணவு உட்கொண்ட 6 பயணிகளுக்கு உடல்நலக் குறைவு

புதுதில்லி-சீல்தா ராஜ்தானி ரயிலில் உணவு உட்கொண்ட பிறகு 6 பயணிகள் நோய்வாய்ப்பட்டதையடுத்து சக பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TNN 29 Mar 2017, 10:20 am
கொல்கத்தா: புதுதில்லி-சீல்தா ராஜ்தானி ரயிலில் உணவு உட்கொண்ட பிறகு 6 பயணிகள் நோய்வாய்ப்பட்டதையடுத்து சக பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil passengers protest after rajdhani food leaves 6 sick
ரயிலில் உணவு உட்கொண்ட 6 பயணிகளுக்கு உடல்நலக் குறைவு


அசன்சோல் மற்றும் சீல்தா ரயில் நிலையத்தில் ரயிலில் வழங்கப்பட்ட உணவு ஆரோக்கியமற்றதாக இருப்பதாக பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ராஜ்தானி போன்ற சிறப்பு ரயில்களில் வழங்கப்படும் உணவும், வழங்கப்படும் நேரமும் மிகவும் மோசமாக இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக பெற்றுள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிழக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 1,200 பயணிகள் பயணிக்கும் ரயிலில் குறிப்பிட்ட ஒரு கோச்சில் பயணிக்கும் 5,6 பயணிகளுக்கு மட்டும் உணவு உட்கொண்ட பிறகு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளனர் எனினும் உரிய விசாரணை நடத்தப்படும் என்று கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய இணை அமைச்சரும், அசன்சோல் எம்.பியுமான சுப்ரியா இவ்விவகாரத்தை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், ரயிலில் வழங்கப்படும் உணவு குறித்து ஆய்வு நடத்த வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Six passengers fell ill after eating the food served on the New Delhi-Sealdah Rajdhani Express leading to protests by co-passengers at two stations on Tuesday.

அடுத்த செய்தி