ஆப்நகரம்

டெல்லி பேரணி வன்முறை: எப்.ஐ.ஆரில் பெயர் இருந்தால் பாஸ்போர்ட் பறிமுதல்..!

டெல்லி பேரணி வன்முறை தொடர்பாக காவல்துறை அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது.

Samayam Tamil 28 Jan 2021, 11:30 am
டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் (FIR) இடம்பெற்றவர்களுக்கு காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil delhi police


மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அதன் ஒருபகுதியாக நேற்று குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கி பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை முதல் ஆயிரக்கணக்கான ட்ராக்டர்கள் டெல்லிக்குள் நுழைய முயற்சித்தன. காவல்துறையினர் தடுப்புகளை போட்டு விவசாயிகளை மறித்தனர்.

விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்ததால் காவல் துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். சில இடங்களில் தடுப்புகளை அகற்றிவிட்டு டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்குள் விவசாயிகள் நுழைந்தனர்.

காஷ்மீரில் ஏழுமலையான் நிகழ்த்தும் ஆச்சரியம்; வெளியான முக்கியத் தகவல்!

மேலும், போலீசாரின் மீது டிராக்டர் விட்டு ஏற்றுவது போல சிலர் நடந்துகொண்டதும், பள்ளத்தில் போலீசார் தள்ளி விடுவதுமான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரம்பரை ஏற்படுத்தியது. இந்நிலையில், போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்களை குறித்த தகவல்கள் சேகரித்து வரும் காவல்துறையினர், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், எப்.ஐ. ஆரில் பெயர் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க டெல்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்யவும் டெல்லி காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி