ஆப்நகரம்

கேரள மக்களுக்கு இலவச பாஸ்போர்ட்: சுஷ்மா அறிவிப்பு

கேளர மக்களின் பாஸ்போர்ட் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் புதிய பாஸ்போர்ட் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 13 Aug 2018, 12:13 am
கேளர மக்களின் பாஸ்போர்ட் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் புதிய பாஸ்போர்ட் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார்.
Samayam Tamil Kerala-floods


கேரளாவில் பெய்த கனமழை காரணமாக அம்மாநிலத்தில் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதுடன் பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கிறது. கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கன்னூர் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் கேரள மக்களின் பாஸ்போர்ட் சேதமடைந்திருந்தால், புதிய பாஸ்போர்ட்டை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று வெளியுறுவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார்.
வெள்ள பாதிப்பிலிருந்து நிலைமை சீரடைந்த பிறகு அந்தந்த பாஸ்போர்ட் அலுவலகங்களை அணுகி இலவச பாஸ்போர்ட் வாங்கிக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி