ஆப்நகரம்

அரசு மருத்துவமனையில் நாய்கள் ராஜ்ஜியம்! நோயாளிகள் அவதி

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு சுகாதார மருத்துவமனைக்குள் நாய்கள் சகஜமாக உலவுவதால் நோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Samayam Tamil 27 May 2018, 6:58 pm
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு சுகாதார மருத்துவமனைக்குள் நாய்கள் சகஜமாக உலவுவதால் நோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
Samayam Tamil unnamed


உத்தரப் பிரதேச மாநிலம் ஹார்டோய் மாவட்டத்தில் அரசு சுகாதார மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் கட்டில்களுக்குக் கீழ் தெரு நாய்கள் வந்து படுத்துக் கிடக்கின்றன.

நாய்கள் அடிக்கடி வருவதால் எங்களுக்கு மிகுந்த அச்சத்திற்கு ஆளாவதாக நோயாளிகள் புகார் அளித்துள்ளனர். ஆனால் ஊழியர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.

இந்த பிரச்னையை கவனத்தில் எடுத்துக்கொண்டு, அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களில் மட்டும் உத்தரப் பிரதேசத்தில் தெரு நாய் கடிக்கு 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி