ஆப்நகரம்

நாட்டின் இளம் முதல்வர் பேமா காண்டு

நாட்டின் இளம் முதல்வர், 37 வயதே ஆன பேமா காண்டு அருணாசலப் பிரதேசத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

TNN 17 Jul 2016, 4:20 pm
இட்டாநகர் : நாட்டின் இளம் முதல்வர், 37 வயதே ஆன பேமா காண்டு அருணாசலப் பிரதேசத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
Samayam Tamil pema khandu is youngest cm in india
நாட்டின் இளம் முதல்வர் பேமா காண்டு


பாஜக ஆதரவுடன் கலிகோ புல் தலைமையிலான குழு, காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அமைந்த அரசு செல்லாது என உச்சநீதிமன்ற உத்தரவு வெளியானது. இதனால் 2015ல் அருணாசலின் முதல்வராக பதவியேற்ற நபாம் துகியின் ஆட்சி, சட்டப்பேரவையில் மெஜாரிட்டி நிரூபிக்க கெடு இன்று கெடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக, நபாம் துகி தனது பதவியை ராஜினாமா செய்து ஆளுநரிடம் கடிதம் அளித்தார். காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு பேமா காண்டு புதிய முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நடந்த பதவியேற்பு விழாவில், புதிய முதல்வராக பேமா காண்டு இன்று பதவியேற்றுக் கொண்டார்.

மொத்தம் உள்ள 60 எம்.எல்.ஏக்கள் கொண்ட பேரவையின் 44 எம்.எல்.ஏக்களின் ஆதரவு பெற்ற கடிதத்தை ஆளுநர் ததாகட் ராயிடம் பேமா காண்டு அளித்ததால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பேமாவுக்கு இனி இல்லை என ஆளுநர் பதவியேற்பு விழாவில் தெரிவித்தார்.

இன்று நடந்த பதவியேற்பு விழாவில் சொவ்நா மெயின் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

அடுத்த செய்தி