ஆப்நகரம்

மாட்டுக் கறி உண்டவர்கள் ’தீண்டத் தகாதவர்கள்’ - கொளுத்தி போட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர்!

மாட்டு இறைச்சியை உண்டவர்களை பழங்காலத்தில் தீண்டத் தகாதவர்களாக இருந்தனர் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் கிருஷ்ண கோபால் சர்ச்சைக்குரிய விஷயத்தை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 Aug 2019, 5:29 pm
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் கிருஷ்ண கோபால். இவர் சமீபத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அதில், ‘பாரத் கா ரஜ்னிதிக் உத்தரராயன்’ மற்றும் ‘பாரத் கா தலித் விமர்ஷ்’ ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
Samayam Tamil Krishna Gopal


இந்நிகழ்ச்சியில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாத் படேலும் கலந்து கொண்டார். இதில் பேசிய கிருஷ்ண கோபால், இந்தியாவின் முதல் தீண்டத் தகாதவர்கள் யார் என்றால், அது மாட்டு இறைச்சியை உண்டவர்கள் தான். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அம்பேத்கரும் கருத்தை பதிவு செய்துள்ளார்.

Also Read: நாளை வரை அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்துக்கு விடுதலை!!

இந்த விஷயம் படிப்படியாக மக்கள் மனதில் ஊடுருவத் தொடங்கியது. இதையடுத்து ஒரு மிகப்பெரிய சமூகமே தீண்டத் தகாதவர்கள் என முத்திரை குத்தப்பட்டது. பின்னர் அவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். நீண்ட காலம் அவமானப் படுத்தப்பட்டார்கள்.

சமூகத்தில் மிகுந்த அழுத்தத்திற்கு உட்படுத்தப் பட்டனர். ராமாயணத்தை எழுதிய வால்மிகி தலித் அல்ல. அவர் ஒரு சூத்திரர். இதேபோல் நிறைய ரிஷிகள் சூத்திரர்களாக இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் பெரிதும் மதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read: காங்கிரஸில் வெடித்த குண்டு- மோடி விஷயத்தில் சசி தரூரிடம் விளக்கம் கேட்கும் கேரளா காங்கிரஸ்!

8ஆம் நூற்றாண்டில் ராஜா தஹிரின் ஆட்சியில் இஸ்லாமிய மன்னர்களின் வருகை தீண்டாமைக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இவ்வாறு தீண்டாமை என்பது இயல்பாகவே நம்மிடம் இருந்ததில்லை. இந்தியாவில் தோன்றிய எந்தவொரு மதத்திலும் தீண்டாமை என்ற விஷயம் இல்லை.

'தலித்’ என்ற சொல் கூட, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டது என்று கூறியுள்ளார். இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அமலாக்கத்துறை விசாரணையை எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும்: சிதம்பரம் கோரிக்கை!!

அடுத்த செய்தி