உயர் பதவிகளில் உள்ளவர்கள் பகிர்ந்த போலி வீடியோக்களால் தூண்டப்பட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். டெல்லியில் அங்கீகாரம் இல்லாத வீடுகளில் வசித்துவரும் 40 லட்சம் பேரின் குடியிருப்புகளை அங்கீகரிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடந்த இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்துப் கருத்துத் தெரிவித்த அவர், “உயர் பதவிகளில் இருப்பவர்கள் போலி வீடியோக்களைப் பகிர்ந்து மக்கள் தூண்டிவிடுகிறார்கள்” என குற்றம் சாட்டினார்.
மலிவு விலையில் அசத்தல் சாப்பாடு- மாநில அரசின் சூப்பர் ஏற்பாடு!
“வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பு” என்று கூறிய மோடி, மக்களவையை, மாநிலங்களவையை, நாடாளுமன்றத்தை மதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
அசாம் குடியுரிமை போராட்டத்தின் அடையாளமாக மாறிய ‘கமோசா’
நமது பாரம்பரியத்திலோ அரசியல் பாணியிலோ பிரச்சினைகள் நீடித்துக்கொண்டே இருக்க அனுமதிப்பது வழக்கமல்ல எனவும் கூறினார். உயர் பதவிகளில் இருப்பவர்கள் போலியான வீடியோவை பகிர்கின்றனர் எனவும் பொதுமக்கள் அவற்றால் தூண்டப்பட்டுள்ளனர் எனவும் மோடி குறிப்பிட்டார்.
40 லட்சம் பே டெல்லி மக்களுக்கு வாழ்க்கை மீது நம்பிக்கையை அளிக்கும் வாய்ப்பு பாஜகவுக்குக் கிடைத்தது திருப்தி அளிக்கிறது எனத் தெரிவித்தார். டெல்லி முழுவதும் காணப்படும் குடிநீர் பற்றாக்குறையைக் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் டெல்லி அரசு அலட்சியமாக உள்ளது எனக் குற்றம் சாட்டினார்.
ஓட்டுக்கு வெங்காயம் தருகிறார்களா- சிக்கிய மர்ம லாரி; நாகையில் நடந்தது என்ன...?
டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடந்த இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்துப் கருத்துத் தெரிவித்த அவர், “உயர் பதவிகளில் இருப்பவர்கள் போலி வீடியோக்களைப் பகிர்ந்து மக்கள் தூண்டிவிடுகிறார்கள்” என குற்றம் சாட்டினார்.
மலிவு விலையில் அசத்தல் சாப்பாடு- மாநில அரசின் சூப்பர் ஏற்பாடு!
அசாம் குடியுரிமை போராட்டத்தின் அடையாளமாக மாறிய ‘கமோசா’
நமது பாரம்பரியத்திலோ அரசியல் பாணியிலோ பிரச்சினைகள் நீடித்துக்கொண்டே இருக்க அனுமதிப்பது வழக்கமல்ல எனவும் கூறினார். உயர் பதவிகளில் இருப்பவர்கள் போலியான வீடியோவை பகிர்கின்றனர் எனவும் பொதுமக்கள் அவற்றால் தூண்டப்பட்டுள்ளனர் எனவும் மோடி குறிப்பிட்டார்.
40 லட்சம் பே டெல்லி மக்களுக்கு வாழ்க்கை மீது நம்பிக்கையை அளிக்கும் வாய்ப்பு பாஜகவுக்குக் கிடைத்தது திருப்தி அளிக்கிறது எனத் தெரிவித்தார். டெல்லி முழுவதும் காணப்படும் குடிநீர் பற்றாக்குறையைக் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் டெல்லி அரசு அலட்சியமாக உள்ளது எனக் குற்றம் சாட்டினார்.