ஆப்நகரம்

மக்களுக்கு எந்தெந்த திட்டங்கள் தேவையோ அதை நிறைவேற்றுவோம்-மோடி

மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். மக்களவையின் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வாழ்த்துகள். டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதங்களை வரவேற்கிறேன். இந்திய மக்கள் தங்களைவிட தேசத்தையே அதிகம் விரும்புகிறார்கள் என்று மக்களவையில் பேசினார் மோடி.

Samayam Tamil 25 Jun 2019, 5:53 pm
மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். மக்களவையின் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வாழ்த்துகள்.
Samayam Tamil modi654


தேர்தல் என்பதை யார் வென்றார்கள் யார் தோற்றார்கள் என நான் பார்ப்பதில்லை இந்திய மக்களுக்காக பணியாற்றி அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே என்னைப்பொருத்தவரை மனதிற்கு திருப்தி தரும்.

டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதங்களை வரவேற்கிறேன். இந்திய மக்கள் தங்களைவிட தேசத்தையே அதிகம் விரும்புகிறார்கள். அதனால்தான் நிலையான அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களுக்கு எந்தெந்த திட்டங்கள் தேவையோ அதை விவாதித்து நிறைவேற்றுவோம். எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்று வலுவாக செயல்படுவோம் என்றார்.

குறிப்பிட்ட சில தலைவர்கள் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், ஒவ்வொரு இந்தியனும் நம் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டதாகவே நாங்கள் பார்க்கிறோம்.

அடுத்த செய்தி