ஆப்நகரம்

உருளைக்கிழக்கு பயிாிட்ட விவகாரத்தில்: வழக்கை திரும்ப பெறுகிறது பெப்சி

காப்புரிமை பெறப்பட்ட குறிப்பிட்ட வகை உருளைக் கிழகங்குகளை பயிரிட்டதாக விவசாயிகள் மீது தொடா்ந்த வழக்கை பெப்சி நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

Samayam Tamil 2 May 2019, 9:23 pm
குஜராத் மாநில அரசுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து குறிப்பிட்ட வகை உருளைக் கிழங்குகளை பயிரிட்ட விவசாயிகள் மீதான வழக்கை பெப்சி நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
Samayam Tamil Potato


பெப்சி நிறுவனம் சிப்ஸ் தயாரிப்பதற்காக பிரத்யேக உருளைக்கிழங்கு வகையை பயன்படுத்தி வருகிறது. இதற்காக கடந்த 2009ம் ஆண்டு பெப்சி நிறுவனம் எப்எல் 2027 என்ற புது வகை உருளைக் கிழங்கை கண்டிறிந்து அதற்கு காப்புரிமை பெற்றது. அதன் பின் அந்த வகை உருளைக் கிழங்கு சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை உற்பத்தி செய்ய சில விவசாயிகளுடன் அந்த நிறுவனம் ஒப்பந்தமும் செய்துள்ளது.

இந்நிலையில் காப்புரிமை பெற்ற உருளைக் கிழங்குகளை குஜராத்தில் உள்ள சில விவசாயிகள் எங்களிடம் அனுமதி பெறாமல் பயிரிட்டதாக கூறி நிறுவனம் சாா்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உருளைக் கிழங்கை பயிாிட்ட 4 விவசாயிகள் தலா ரூ.1 கோடி வீதம் இழப்பீடு தரவேண்டும் என்று நீதிமன்றத்தில் தொிவிக்க்பபட்டது.

மேலும் ஏற்கனவே பயிரிட்ட உருளைக் கிழங்கையும், விதைகளையும் எங்களிடம் திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்றும், பயிரிட்ட விவசாயிகள் எங்களிடம் ஒப்பந்தம் செய்துகொண்டு விதையை பயிரிட வேண்டும் என்றும் தொிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் உள்ள விசாயிகள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் மாநில அரசு விவசாயிகளுக்கு துணைநிற்கும் என்று குஜராத் அரசு தொிவித்தது. இதனைத் தொடா்ந்து இன்று மாநில நிா்வாகம் சாா்பில் பெப்சி நிறுவனத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவா்ாத்தைக்குப் பின்னா் விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெறுவதாக நிறுவனம் சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி