ஆப்நகரம்

பெங்களூரு பேருந்து நிலையத்துக்கு சூட்டப்படும் பெரியாரின் பெயர்

தமிழகத்தின் தலைசிறந்த தலைவரான பெரியாரின் பெயர் பெங்களூருவில் உள்ள பேருந்து நிலையத்துக்கு சூட்டப்படும் என கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அறிவித்துள்ளார்.

TNN 16 Sep 2017, 4:45 pm
தமிழகத்தின் தலைசிறந்த தலைவரான பெரியாரின் பெயர் பெங்களூருவில் உள்ள பேருந்து நிலையத்துக்கு சூட்டப்படும் என கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அறிவித்துள்ளார்.
Samayam Tamil periyar is the name given to the bengalur bus stand
பெங்களூரு பேருந்து நிலையத்துக்கு சூட்டப்படும் பெரியாரின் பெயர்


தமிழ்நாட்டின் பல சமூக சீர்த்திருத்தங்களை முன்னெடுத்த சீர்த்திருத்தவாதிகளில் பெரியாரின் பங்கு இன்றியமையாதது. மற்ற மாநிலங்களை ஓப்பிடுக்கையில் தமிழகத்தில் உள்ள பெண்கள் அறிவிலும், திறமையிலும் ஜொலிப்பதற்கு பெரியார் ஆற்றிய பங்கு அளப்பறியது.

இந்த நிலையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள பேருந்து நிலையத்துக்கு தந்தை பெரியாரின் பெயர் சூட்டப்படும் என கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் திராவிட கலாச்சாரம் வளரவும், சமூக நீதிக்காகவும் பெரியார் பல போராட்டங்களை நடத்தியதன் விளைவாகவே நாம் இன்று பல்வேறு பலன்களை அனுபவித்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக பெரியாரின் அடிக்கோளான மூட நம்பிக்கைகளை தடுக்கும் விதமாக கர்நாடகா அரசு சட்ட மசோதா ஒன்றையும் கொண்டுவர உள்ளதாக ராமலிங்க ரெட்டி அறிவித்துள்ளார்.

Periyar is the name given to the bengalur bus stand.

அடுத்த செய்தி