ஆப்நகரம்

PETA India: மீண்டும் ஜல்லிக்கட்டு-க்கு பிரச்னை? : பீட்டா உச்சநீதிமன்றத்தில் புதிய முறையீடு!

ஜல்லிக்கட்டு வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு முறையிட முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 20 Dec 2018, 5:06 pm
புதுடெல்லி : ஜல்லிக்கட்டு வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு முறையிட முடிவு செய்துள்ளது.
Samayam Tamil Jallikattu


ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைப்பெறும். பீட்ட தொடர்ந்த வழக்கால் சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தன.

பின்னர் 2017ல் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தால் உலகமே தமிழகத்தை திரும்பி பார்த்தது. இதையடுத்து சில கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை எதிர்த்து பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது.

பீட்டா முடிவு :

பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கும் என்பதால், ஒரு ஆண்டுக்கு மேலாக கிடப்பில் கிடக்கும் வழக்கை பொங்கல் பண்டிகைக்கு முன் விரைவாக விசாரித்து நல்லதொரு தீர்ப்பை வழங்க வேண்டும் என பீட்ட கோரிக்கை வைத்துள்ளது.

அடுத்த செய்தி