ஆப்நகரம்

இளம் பெண்கள் என்றால் பீட்டருக்கு ஆர்வம் அதிகம் !

ஷீனா போரா கொலை வழக்கு குற்றவாளியான பீட்டர் முகர்ஜியா இளம் பெண்கள் மீது ஆர்வம் அதிகம் என அவரது முன்னாள் மனைவி, சப்னம் சிங் தெர்வித்துள்ளார்.

TOI Contributor 21 Jul 2016, 3:29 pm
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கு குற்றவாளியான பீட்டர் முகர்ஜியா இளம் பெண்கள் மீது ஆர்வம் அதிகம் என அவரது முன்னாள் மனைவி, சப்னம் சிங் தெர்வித்துள்ளார்.
Samayam Tamil peter had a fascination for young women
இளம் பெண்கள் என்றால் பீட்டருக்கு ஆர்வம் அதிகம் !


ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, பீட்டர் முகர்ஜியாவின் முன்னாள் மனைவி சப்னம் சிங்கை, சி.பி.ஐ., விசாரித்த போது கொடுக்கப்பட்ட வாக்கும்மூலங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.

தற்போது அந்ததகவல்கள் வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, சில தகவல்கள் கசிந்துள்ளன. அதில், சப்னம் சிங் தெரிவித்துள்ளது:
பீட்டர் தனக்கு என ஒரு பாதைகள் இல்லாமல் இருந்து வந்தார். அவருக்கு இளம் பெண்கள் என்றால் ஆர்வம் அதிகம். தவிர, லேட் நைட் பார்ட்டிகளில் அதிகம் கலந்து கொள்வார். எப்போதும் அவரைச்சுற்றி இளம் பெண்கள் இருக்கவேண்டும் என விரும்புவார். இதனால் தான் அவரை விட்டு விலக நான் முடிவு செய்ததற்கு முக்கிய காரணம். இதே போல, ஒருநாள் ஒரு பெண்ணுடன் வீட்டுக்கு வந்தார். பின் அவரை தனது தோழி இந்திராணி என என்னிடம் அறிமுகம் செய்து வைத்தார். பின்பு தான் தெரிந்தது அவருக்கும், இந்திராணிக்கும் திருமணமாகிவிட்டது என்று.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

அடுத்த செய்தி