ஆப்நகரம்

தினமும் மாறும் பெட்ரோல், டீசல் விலை: சாமானியர்களுக்கு மற்றொரு சிக்கல்!

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நாள் தோறும் உயர்த்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

TOI Contributor 12 Apr 2017, 3:24 pm
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நாள் தோறும் உயர்த்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil petrol diesel prices to change every day from may 1
தினமும் மாறும் பெட்ரோல், டீசல் விலை: சாமானியர்களுக்கு மற்றொரு சிக்கல்!


சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை நிர்ணயத்தைச் செய்கின்றன. இதற்கே, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், நாள் தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்க மத்திய முடிவு செய்யதுள்ளது. மே 1ஆம் தேதி முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, நாட்டின் ஐந்து நகரங்களில் (விசாகப்பட்டணம், உதாம்பூர், ஜாம்செட்பூர், சண்டிகார், புதுச்சேரி) மட்டும் தினமும் விலையை நிர்ணயம் செய்யும் முறை சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.

இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் ஆகிய நிறுவனங்கள் இந்த விலை மாற்றத்தை அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Oil Cos have implemented this (everyday change in petroleum products) on a pilot project in Puducherry,Vizag, Udaipur, Jamshedpur&Chandigarh — ANI (@ANI_news) April 12, 2017 மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டார். அதன்படி, “தினமும் விலையை மாற்றும் திட்டம் ஐந்து நகரங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளன. பின்னர், நாடு முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முடிவு செய்யப்படும்,” என்று கூறியுள்ளார்.

தினமும் செய்யப்படும் விலை மாற்றம் துறைசார் வல்லூநர்களின் பரிந்துரைப்படியே மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய அரசு அதில் தலையிடாது என்றும் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி கூறியுள்ளார்.

அடுத்த செய்தி