ஆப்நகரம்

காவிரி வன்முறை: பீதியான பினராயி ரயில்வே அமைச்சருக்கு கடிதம்

காவிரி பிரச்னையால் பீதியடைந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

TNN 13 Sep 2016, 8:34 am
திருவனந்தபுரம்: காவிரி பிரச்னையால் பீதியடைந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil pinarayi asks railway minister to operate special train to kerala from bengaluru
காவிரி வன்முறை: பீதியான பினராயி ரயில்வே அமைச்சருக்கு கடிதம்


தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழர்களையும் தமிழக வாகனங்களையும் தாக்கி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழக வாகனங்கள் பல இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. பெங்களூரு நகரமே புகைமண்டலமாக காணப்படுகிறது.

இந்நிலையில், பெங்களூருவில் வசிக்கும் கேரள மக்கள் பாதுகாப்பாக அவர்களது சொந்த மாநிலம் திரும்ப இரண்டு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்யுமாறு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு கேரள முதல்வர் பினராயி, கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று பக்ரீத் பண்டிகையும், நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், கர்நாடகத்தில் உள்ள கேரள மக்கள் பாதுகாப்பாக சொந்த மாநிலம் திரும்பும் பொருட்டு, பினராயி கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.

பரம்பிக்குளம் அணைப்பகுதியில் தமிழக அதிகாரிகள், பொதுமக்கள் மீது தடியடி நடத்திய கேரள போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தற்போது மட்டும் பினராயி விஜயன் விரைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி