ஆப்நகரம்

பொன். ராதாகிருஷ்ணன் விஷயத்தில் காவல்துறை அதிகாரி மீது தவறில்லை: பினராயி விஜயன்!

சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதகிருஷ்ணனை தடுத்ததில் காவல்துறை உயர் அதிகாரி மீது தவறில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Nov 2018, 12:09 pm
சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதகிருஷ்ணனை தடுத்ததில் காவல்துறை உயர் அதிகாரி மீது தவறில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sava.


சபரிமலைக்குஎல்லா வயது பெண்களும்செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து கேரளா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சபரிமலை செல்லும்அய்யப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.முக்கியமாக நிலக்கல் வரை மட்டுமே பக்தர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.அங்கிருந்துபேருந்தில்தான்பக்தர்கள் செல்ல வேண்டும்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்புமத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டி தனது ஆதரவாளர்களுடன் காரில் சபரிமலைக்கு சென்றார். அப்போது நிலக்கல்லில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை உயரதிகாரி, அவரது காரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் இந்தசெயலுக்குபாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் நேற்று கன்னியாகுமாரியில் முழு கடை அடைப்பு போராட்டத்தையும் பாஜகவினர்நடத்தினர்.

இந்நிலையில் கேரள முதல்வர் பினரயி விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது ‘சபரிமலையில் பாதுகாப்புபணியில் காவல்துறையினர்சரியான முறையில்தான் நடந்து வருகிறார்கள். சபரிமலைக்குசென்ற மத்திய அமைச்சர் பொன் ராதகிருஷ்ணனிடம் காவல்துறை உயர் அதிகாரி யதீஷ் சந்திரா அவமரியாதையாக நடக்கவில்லை. தன்னுடன் வந்த அனைத்து வாகனங்களையும் பம்பைக்கு அனுமதிக்க வேண்டும் என்று பொன் ராதகிருஷ்ணன் கேட்டுக்கொண்டதால்தான், வாக்குவாதம்ஏற்படும் நிலைஉருவானது. மேலும் உயரதிகாரிநடந்துகொண்டதில் தவறில்லை.

சபரிமலை செல்லும் உண்மையான பக்தர்களுக்குகாவல்துறையினர் எந்த தடையும் விதிக்கவில்லை என்றுஐ.ஜிகேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதை உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

கேரளாவில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் வெளிமாநிலத்திலிருந்து இங்கு வந்துபணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதுதாக்குதல்நடத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சபரிமலை பிரச்சனையை வைத்து கேரளாவை போராட்ட பூமியாக்க யார் நினைத்தாலும் அது நடக்காது.

அடுத்த செய்தி