ஆப்நகரம்

பியூஷ் கோயலுக்கு கைமாறிய ராம்விலாஸ் பஸ்வான் அமைச்சரவை!

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவையடுத்து அவர் வகித்து வந்த உணவுத்துறையை பியூஷ் கோயல் வசம் கூடுதலாக ஒப்ப்டைக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 9 Oct 2020, 4:32 pm
லோக் ஜன்சக்தி கட்சியின் நிறுவனரும், மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சருமாக இருந்தவர் ராம்விலாஸ் பஸ்வான். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து உடல்நிலை தேறி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
Samayam Tamil பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்


ராம் விலாஸ் பஸ்வானின் மறைவை அவரது மகன் சிராக் பஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் உறுதி செய்திருந்தார். ராம்விலாஸ் பஸ்வானின் மறைவிற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராம்விலாஸ் பஸ்வான் மறைவின் மூலம் இந்த தேசம் சிறந்த தலைவரை இழந்து தவிக்கிறது. டுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவையடுத்து அவர் வகித்து வந்த உணவுத்துறையை பியூஸ் கோயல் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

லோக் ஜன்சக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்!

பியூஷ் கோயல் ஏற்கனவே ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக உள்ள நிலையில், தற்ப்போது அவருக்கு கூடுதலாக மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி