ஆப்நகரம்

ஊரடங்கில் அடுத்தகட்ட தளர்வு: மாநில அரசு அறிவிப்பு!

மகராஷ்டிராவில் நாளை முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படவுள்ளன.

Samayam Tamil 15 Nov 2020, 6:46 am
மகாராஷ்டிராவில் ஊரடங்கிலிருந்து அவ்வப்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புகளைச் சந்தித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.
Samayam Tamil lockdown relaxation


மகாராஷ்டிராவின் பாதிப்பு மட்டும் ரஷ்யா உள்ளிட்ட பிற வெளிநாடுகளின் பாதிப்பைவிட ஒரு கட்டத்தில் அதிகமானது. இப்போதும் சரவதேச அளவில் முதல் ஐந்து, ஆறு இடங்களுக்குள் வரும்படியான பாதிப்பு, பலி எண்ணிக்கைகளை கொண்டுள்ளது அம்மாநிலம்.

இருப்பினும் அன்றாடம் பதிவாகிவரும் பாதிப்புகளின் எண்ணிக்கை முன்பைவிட சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

வீசும் காற்றில் விஷம்: திண்டாடும் மக்கள்!

அந்தவகையில் நாளை முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கம் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்களை நாளை முதல் (நவம்பர் 16) திறக்க முதல்வர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுலா சென்ற குடும்பம் பேருந்து விபத்தில் பலியான சோகம்!

இந்த அறிவிப்பு குறித்து மகாராஷ்டிர அமைச்சர் ஜெயந்த் பாட்டீல், "கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பதால், இந்த முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் ஒரே விதிமுறைதான். முகக் கவசம் மற்றும் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி உள்ளிட்டவற்றைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம்" என்றார்.

அடுத்த செய்தி