ஆப்நகரம்

தீபக் மிஸ்ரா பதவி நீக்க வழக்கு: புதிய அறிவிப்பு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 7 May 2018, 8:22 pm
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
Samayam Tamil CJI-Dipak-Misra


உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில் பாரபட்சமாக நடந்துகொள்வதால் மூத்த நீதிபதிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக செய்தியாளர் சந்திப்பு நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்ற நீதிபதி மீதான கண்டன தீர்மானத்திற்காக கையெழுத்து இயக்கம் நடத்தினர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்பிக்கள், மற்றும் அதன் தோழைமை கட்சியினர் இதில் கையெழுத்திட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இந்த தீர்மானத்தை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் சமர்ப்பித்தார்.

எதிர்க்கட்சிகளின் தீர்மானம் குறித்து சட்ட வல்லுநர்களின் ஆலோசித்த வெங்கையா நாயுடு, அவர்களது பரிந்துரையை ஏற்று நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்தை நிராகரித்தார்.
இந்நிலையில், வெங்கையாவின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.போப்தி, என்.வி.ராமண்ணா, அருண் மிஷ்ரா மற்றும் ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிப்பார்கள் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி