ஆப்நகரம்

NEET Exam 2020: 700 கி.மீ ஓடிவந்து 10 நிமிடத்தில் மிஸ்ஸான நீட்; தீர்வு தருமா உச்ச நீதிமன்றம்?

பத்து நிமிடங்கள் தாமதமாக வந்த காரணத்தால் நீட் தேர்வு எழுத அனுமதிக்காத விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சூ-மோட்டோ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Sep 2020, 5:28 am
நாடு முழுவதும் மருத்துவ இளங்கலை படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக பீகாரைச் சேர்ந்த மாணவன் 70 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார். பல்வேறு பேருந்துகள் மாறி கடைசியில் கார் மூலம் கொல்கத்தாவில் உள்ள தேர்வு மையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் 10 நிமிடங்கள் தாமதமானதால் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்த மாணவர் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். இவ்வளவு நீண்ட பயணம் செய்து வந்த மாணவரை வெறும் 10 நிமிட தாமதத்தால் அனுமதிக்காதது மிகப்பெரிய கொடுமை என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விஷயம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியது.
Samayam Tamil Supreme Court


இதுகுறித்து மாணவர் சந்தோஷ் குமார் யாதவ்(19) கூறுகையில், பீகாரில் எனது ஊரில் இருந்து சனிக்கிழமை காலை 8 மணிக்கு பேருந்தில் புறப்பட்டோம். முசாபர் நகருக்கும், பாட்னாவிற்கும் இடையே கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது. இதில் சுமார் 6 மணி நேரம் வீணானது. பாட்னாவில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 1 மணியளவில் கொல்கத்தா வந்து சேர்ந்தோம்.

இடியாப்பச் சிக்கலில் NEET - JEE தேர்வுகள்; தள்ளிவைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

அங்கிருந்து கார் மூலம் 1.40 மணிக்கு தேர்வறைக்குச் சென்றோம். ஆனால் தேர்வறைக்கு 1.30 மணிக்குள் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த காரணத்தால் என்னை அனுமதிக்கவில்லை. அங்கிருந்த பாதுகாவலர், பள்ளி முதல்வர் உள்ளிட்ட பலரிடம் கெஞ்சினோம். ஆனால் யாரும் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன்.

10 நிமிடத்தில் ஒரு வருடத்தையே இழந்துவிட்டேன். மீண்டும் ஓராண்டு தேர்விற்கு தயாராக வேண்டும். பார்க்கலாம் என்ன நடக்கும் என்று மாணவர் சந்தோஷ் குமார் யாதவ் மிகவும் வேதனையுடன் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஷ்ஸ்வாத் ஆனந்த் என்பவர் சூ-மோட்டோ மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், உணவு, இருப்பிடம், தண்ணீர், போக்குவரத்து போன்ற விஷயங்களால் தேர்வெழுத முடியாமல் போன மாணவர்களுக்கு சலுகை காட்ட வேண்டும். இதற்கென்று தனியாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். மேற்கூறிய விஷயங்களால் தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஜேஇஇ அல்லது நீட் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கு அடுத்த சில நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

அடுத்த செய்தி