ஆப்நகரம்

மறுபடியும் ஸ்குலுக்கு போங்க; அரசியல்வாதிகளுக்கு அட்வைஸ்

அரசியல்வாதிகள் பெற்றோர்களாக மீண்டும் பள்ளிக்கு செல்ல வேண்டுமென்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியாத்திரி கூறியுள்ளார்.

TNN 14 Sep 2017, 7:11 am
அரசியல்வாதிகள் பெற்றோர்களாக மீண்டும் பள்ளிக்கு செல்ல வேண்டுமென்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியாத்திரி கூறியுள்ளார்.
Samayam Tamil please go and check school environment says kailash
மறுபடியும் ஸ்குலுக்கு போங்க; அரசியல்வாதிகளுக்கு அட்வைஸ்


இந்தியாவில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. குருகிராமில் ஏழு வயது மாணவன் பள்ளிக்கழிப்பறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியாத்திரி இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கைலாஷ் கூறுகையில், பள்ளிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக குழந்தைகள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறினார்.

மேலும், நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் பாகுபாடு ஏதுமின்றி ஒரு சராசரி பெற்றோர்களாக பள்ளிக்கு சென்று அங்குள்ள சூழலை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.


நாம் விழித்துக்கொண்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்காத வரை, நம் குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள். இல்லையெனில், நம் நாட்டை குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக்குவதில் நாம் தோற்றுவிடுவோம் என்றும் கூறினார்.

அடுத்த செய்தி