ஆப்நகரம்

அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டாங்களா? தமிழக பெண்ணிடம் மோடி கலந்துரையாடல்

ஏழைகளுக்கான வீடு திட்டத்தின் வீடு பெறுவதற்கு அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டார்களா என்று தமிழக பயனாளியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

Samayam Tamil 6 Jun 2018, 2:10 pm
ஏழைகளுக்கான வீடு திட்டத்தின் வீடு பெறுவதற்கு அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டார்களா என்று தமிழக பயனாளியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
Samayam Tamil modi smile


பிரதமரின் ஏழைகளுக்கான வீடு என்ற அவாஸ் யோஜனா திட்ட நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது பயனாளிகளிடம் நமோ ஆப் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார். அப்போது தமிழகத்தின் சார்பில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பேகம்பீ கதார்பெக் என்ற பெண்ணிடம் பிரதமர் மோடி பேசினார்.


அப்போது, வீடு கொடுப்பதற்காக அதிகாரிகள் யாரும் லஞ்சம் கேட்டார்களா என்று வெளிப்படையாக கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த பேகம்பீ, வீடு கட்டுவதற்காக தான் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், தனக்கென்று வீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், பிரதமரின் திட்டம் மூலம் அது நிறைவேறியிருக்கிறது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இனி மழை காலங்களை எண்ணி வருத்தப்பட தேவையில்லை என்றும் கூறினார்.

பின்னர் அனைவரிடத்திலும் பேசிய மோடி, இடைத்தரகர்களின் குறுக்கீடு இல்லாதவகையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் நல்ல தரத்துடன் அமைக்கப்பட்டுள்ள அனைவருகு்கும் வீடு திட்டம் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி