ஆப்நகரம்

மறுபடியும் அதே போட்டோ; அதே ஹெலிகாப்டர்; அப்போ சென்னை, இப்போ பீகார் !!

சென்னையில் வர்தா புயல் வந்த போது, வெள்ளம் பாதித்த இடங்களை பிரதமர் மோடி எவ்வாறு பார்வையிட்டு சென்றாரோ, அதே போல், தற்போது பீகார் வெள்ளப்பகுதிளையும் பார்வையிட்டு வருகிறார்.

TNN 26 Aug 2017, 5:49 pm
சென்னையில் வர்தா புயல் வந்த போது, வெள்ளம் பாதித்த இடங்களை பிரதமர் மோடி எவ்வாறு பார்வையிட்டு சென்றாரோ, அதே போல், தற்போது பீகார் வெள்ளப்பகுதிளையும் பார்வையிட்டு வருகிறார்.
Samayam Tamil pm makes aerial survey of flood hit bihar announces rs 500 crore
மறுபடியும் அதே போட்டோ; அதே ஹெலிகாப்டர்; அப்போ சென்னை, இப்போ பீகார் !!


கடந்தாண்டு வர்தா புயல் பாதிப்பால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின.

அப்போது வர்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பார்வையிட்டுச் சென்றார். இருந்தபோதிலும், அந்த சமயத்தில் வெள்ளப்பாதிப்புகளை மோடி பார்வையிடுவது போல் வெளிவந்த புகைபடங்கள் அனைத்தும் போட்டோஷாப்பில் எடிட் செய்யப்பட்டது என்றும், உண்மையில் அவர் வரவில்லை என்றும் கூறப்பட்டு வந்தது.



இந்நிலையில், தற்போது பீகாரிலும் மழை வெள்ளப்பாதிப்புகள் கடுமையாக உள்ளன. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்கள் வெள்ள நீரில் மிதந்து வருகிறது. இதுவரை மழை வெள்ளத்தில் 341 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குழந்தைகள் பலியாகி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதில் சுமார் 1.46 கோடிக்கும் அதிகமான மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலமாக வெள்ளப்பாதிகளை ஆய்வு செய்தார்.

அவருடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர் சுசில்குமார் ஆகியோர் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டனர்.

மேலும், பீகார் மாநிலத்திற்கு உடனடி வெள்ள நிவாரணமாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சென்னையில் மழை வெள்ளம் பாதிப்பு வந்த போதும், வர்தா புயல் வந்த போதிலும் மாநில அரசு மத்திய அரசின் உதவியை நாடியது. அந்தக்காலக்கட்டங்கில் தமிழகத்திற்கு குறைவான நிவாரணத் தொகை மட்டுமே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி