ஆப்நகரம்

கொரோனாவுக்கு பின் ஒட்டுமொத்த உலகையும் இந்தியா வழிநடத்த வேண்டும்: பிரதமர் மோடி

கொரோனா காலத்துக்கு பின் ஒட்டுமொத்த உலகையும் இந்தியா வழிநடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 12 May 2020, 9:39 pm
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் மே மாதம் 17 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு (மே 12) 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
Samayam Tamil modi


அவரது உரையின் சாராம்சம்:

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 2.75 பேர் வரை உயிரிழந்துள்ளனர்; 42 லட்தம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. தற்போது உலகம் முழுவதும் அமலில் உள்ள பொதுமுடக்கத்தை உலக மக்கள் இதுவரை கண்டிருக்கமாட்டார்கள். ஒரு வைரஸ் உலகில் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது.

lockdown 4: பொதுமுடக்கம் நீட்டிப்பு -பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!!

கொரோனா வைரசிடமிருந்து நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும். அதேசமயம் நாட்டின் முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக கடந்த 4 மாதங்களாக, கொரோனாவுக்கு எதிராக நாம் கடுமையாக போராடி வருகிறோம்.

கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் முக்கியமான கட்டத்தில் உள்ளோம். கொரோனா மனிதனுக்கு பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது.


உலகில் நடந்துவரும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. தமது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம், உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளியை ஏற்றி வருகிறது. கொரோனா காலத்துக்கு பின் ஒட்டுமொத்த உலகையும் இந்தியா வழிநடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தமது உரையில் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி