ஆப்நகரம்

தெற்கு ஆசியாவில் முதல் நட்பு நாடு இலங்கை: பிரதமர் மோடி

இலங்கைக்கு இலவச ஆம்புலென்ஸ் வழங்கும் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு தெற்காசியாவிலேயே சிறந்த மற்றும் நம்பகமான நட்பு நாடாக இருப்பது இலங்கைதான் என்று தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Jul 2018, 5:22 pm
இலங்கைக்கு இலவச ஆம்புலென்ஸ் வழங்கும் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு தெற்காசியாவிலேயே சிறந்த மற்றும் நம்பகமான நட்பு நாடாக இருப்பது இலங்கைதான் என்று தெரிவித்துள்ளார்.
Samayam Tamil DioB56IUEAc0DrS


இலங்கையின் யாழ்பாணத்திற்கு அவசர உதவிக்கான இலவச ஆம்புலென்ஸ் வானங்கள் இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் பயன்பாட்டுக்கான தொடக்க விழா இன்று இலங்கையில் நடைபெற்றது.

இதில், வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "இலங்கைக்கு உதவி புரிய முதல் நட்புக்கரம் நீட்டுவதில் இந்தியபெருமிதம் அடைகிறது. நல்ல காலங்களிலும் கடினமான காலங்களிலும் இலங்கைக்கு துணை நிற்பதில் இந்தியா முதன்மையாக இருக்கும்." என்று கூறினார்.

தொடர்ந்து, "இந்தியாவுக்கு தெற்கு ஆசியாவிலும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் சிறந்த மற்றும் நம்பகமான நட்பு நாடாக இருப்பது இலங்கைதான்." எனக்கூறிய அவர், வளர்ச்சிக்கான இரு நாடுகளின் கூட்டுறவு கூட்டான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்று கருதவதாகவும் குறிப்பிட்டார்.
இரு நாட்டு மக்களுடம் தொடர்ந்து நட்புடன் பழகிவந்தால் மேலும் நெருக்கமான நட்பு நாடுகளாக உருவாக முடியும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். மேலும், "உருவாகிவரும் புதிய இந்தியாவைப் பார்க்க இலங்கை மக்கள் இந்தியாவுக்கு வர வேண்டும்" என்றும் பிரதமர் மோடி அழைப்புவிடுத்தார்

அடுத்த செய்தி