தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மருத்துவர்களிடையே காணொலி வாயிலாக உரையாற்றினார். இந்த நிகழ்வை இந்திய மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நமது மருத்துவர்களும் மருத்துவத் துறையை சேர்ந்தவர்களும் நாட்டிற்கும், 130 கோடி மக்களுக்கும் சேவை செய்ய இரவும் பகலும் அயராது உழைத்து வருகின்றனர். அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மருத்துவர்களின் அறிவும், நிபுணத்துவமும் கொரோனாவின் கடினமான காலங்களில் நம் தேசத்தை காப்பாற்றியது என்று புகழாரம் சூடிய மோடி, கொரோனா சிகிச்சையின் போது பல மருத்துவர்களே உடல்நலம் மற்றும் தனிப்பட்ட பல பிரச்சினைகளை எதிர்கொண்டனர். தங்கள் உயிருக்காக போராடிய நிலையிலும் மருத்துவர்கள் பல லட்சம் பேருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது பல மருத்துவர்கள் தங்கள் உயிரை இழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மக்கள் அனைவருக்கும் தரமான சுகாதார சேவையை வழங்க மருத்துவ உள்கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் சுகாதார கட்டமைப்பை மேலும் மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி கடன் உத்தரவாத திட்டம் தொடங்கப்படும். குழந்தை பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.22 ஆயிரம் கோடி தொகையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்றும் அப்போது பிரதமர் மோடி தகவல்தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் நம்மால் பலரையும் காப்பாற்ற முடிந்தது, இந்த அனைத்து பெருமையும் நமது மருத்துவர்கள், முன்கள பணியாளர்களையே சார்ந்துள்ளது. அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எப்போதும் பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
மக்கள் அனைவருக்கும் தரமான சுகாதார சேவையை வழங்க மருத்துவ உள்கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் சுகாதார கட்டமைப்பை மேலும் மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி கடன் உத்தரவாத திட்டம் தொடங்கப்படும். குழந்தை பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.22 ஆயிரம் கோடி தொகையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்றும் அப்போது பிரதமர் மோடி தகவல்தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் நம்மால் பலரையும் காப்பாற்ற முடிந்தது, இந்த அனைத்து பெருமையும் நமது மருத்துவர்கள், முன்கள பணியாளர்களையே சார்ந்துள்ளது. அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எப்போதும் பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.