ஆப்நகரம்

‘லாலி பாப் அரசியல்’ செய்யும் காங்கிரஸ்: மோடி சாடல்

காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு போலியான வாக்குறுதிகளை லாலி பாப் போல வழங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.

Samayam Tamil 26 Apr 2018, 11:24 am
காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு போலியான வாக்குறுதிகளை லாலி பாப் போல வழங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.
Samayam Tamil PM_ModiApr26


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 12ஆம் தேதி நடக்கிறது. மே 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவு வெளியாக உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் பாஜக சார்பில் பிரச்சாரம் செய்வதற்கு முன், அக்கட்சியின் வேட்பாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார். அப்போது அவர் பேசியவற்றின் முக்கிய அம்சங்கள்,

கட்சிகள் வளர்ச்சியைக் கொண்டுவரதற்கான விவாதங்களுக்கு முன்வர அஞ்சுகின்றன. சாதி அரசியல் செய்பவர்களுக்கு நாட்டின் வளர்ச்சி என்பது தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு போலியான வாக்குறுதிகளை லாலி பாப் போல வழங்குவதுதான். அவர்கள் அடுத்த தேர்தல் வந்துவிட்டால் வேறொரு சமுதாயத்திடம் சென்றுவிடுவார்கள்.

கடந்த சில தேர்தல்களை கவனித்தால், சில அரசியல் கட்சிகள் மதம் சார்ந்து மக்களை பிளவுபடுத்துவதைப் பார்க்கலாம். தேர்தலின் போது சில சமூகத்தினரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு ஆதாயம் அடைகிறார்கள். பின் அந்த மக்களை மறந்துவிடுகிறார்கள்.

மக்களின் முன்னேற்றத்திற்கான பிரச்னைகளின் அடிப்படையில்தான் நாம் தேர்தலில் போட்டியிடுகிறோம். இதனால், நம்மை ஒருபோதும் அவர்களால் தோற்கடிக்க முடியாது.
கர்நாடகாவில் நமக்கு மூன்று கொள்கைகள்தான் நீண்ட காலமாக இருக்கின்றன. வளர்ச்சி, வேகமான வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்தமான வளர்ச்சி. பாஜக வளர்ச்சிக்கான அரசியலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் 20 லட்சம் கழிப்பறைகளைக் கட்டியுள்ளது. நாம் 34 லட்சம் கழிப்பறைகளைக் கட்டியுள்ளோம். கர்நாடகாவில் தற்போது 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை இப்போதே நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த பிறகு காங்கிரஸ் கட்சி தாராளமாக பொய்களை பரப்பியுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் மக்களை பிரித்தாளும் அவர்களது போலித்தனத்தை நாம் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறோம்.

காங்கிரஸ் கலாச்சாரத்தை அழித்தால் ஒழிய மாசற்ற அரசியலை நம்மால் உருவாக்க முடியாது.

கர்நாடக மக்கள் அனைவர் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கர்நாடகத்தில் கூடிய விரைவில் தாமரை மலரும் என்பது உறுதி.

அடுத்த செய்தி