ஆப்நகரம்

சிவப்பு விளக்கு பயன்படுத்தத் தடை: மத்திய அரசு உத்தரவு

வாகனங்களின் சிவப்பு விளக்கு பயன்படுத்துவதற்கு தடை விதித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

TNN 19 Apr 2017, 3:25 pm
டெல்லி: வாகனங்களின் சிவப்பு விளக்கு பயன்படுத்துவதற்கு தடை விதித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil pm modi cracks down on lal batti culture govt bans use of red beacon by vips from may 1
சிவப்பு விளக்கு பயன்படுத்தத் தடை: மத்திய அரசு உத்தரவு


அவசர சிகிச்சை வாகங்களில் மட்டுமே சிவப்பு விளக்குகளை பயன்படுத்தலாம். பிற வாகனங்களில் அவற்றை பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

பிரதமர், குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளும் தங்கள் வாகனங்களில் சிவப்பு விளக்கை இனிமேல் பயன்படுத்த முடியாது.

கடந்த ஒன்றைரை ஆண்டுகளாக இது தொடர்பாக அறிவிப்பு நிலுவையில் இருந்தது. சிவப்பு விளக்கு பயன்பாட்டைக் கட்டுப்பாடுத்துவது குறித்து மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே மாதம் முதல் தேதியிலிருந்து இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.

அடுத்த செய்தி