ஆப்நகரம்

தாக்குதல் குதூகலத்தில் குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த பிரதமர்

டெல்லியில், மெட்ரோ ரயிலில் சக பயணிகளோடு பயணியாக பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அப்போது, புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை மூலம் பதிலடி தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டதற்காக, பிரதமரை பொதுமக்கள் பாராட்டினர்.

Samayam Tamil 26 Feb 2019, 6:58 pm
டெல்லியில், மெட்ரோ ரயிலில் சக பயணிகளோடு பயணியாக பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார்.
Samayam Tamil modi kids


அப்போது, புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை மூலம் பதிலடி தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டதற்காக, பிரதமரை பொதுமக்கள் பாராட்டினர். டெல்லி கான் மார்க்கெட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, இஸ்கான் மைய ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி பயணமானார்.

அப்போது, சிறார்கள், பெரியவர்கள் என அனைவரிடமும் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, குழந்தைகளையும் கொஞ்சி மகிழ்ந்தார். குழந்தை ஒன்றை அதன் தாயாரிடமிருந்து வாங்கிய பிரதமர் மோடி, அக்குழந்தையை தனது மடியில் அமரவைத்து அளவளாவினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதெல்லாம் வரவிருக்கும் தேர்தலுக்கான விளம்பரம் என எதிர்கட்சிகளின் ஆதரவாளர்கள் மறுபக்கம் விமர்சித்து வருகின்றனர். எது எப்படியோ! மோடி அதுகுறித்தெல்லாம் கவலைப் படும் மன நிலையில் இல்லை. குதூகலமாகவே காணப்படுகிறார்.

அடுத்த செய்தி