ஆப்நகரம்

மேலும் ஒரு சாதனை; அதுவும் 20 ஆண்டுகள் - ஆச்சரியம் நிகழ்த்திய பிரதமர் மோடி!

மக்கள் சேவையில் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றி பிரதமர் மோடி புதிய சாதனை படைத்துள்ளார்.

Samayam Tamil 7 Oct 2020, 10:49 am
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, குஜராத் மாநிலத்தில் வலுவான நிலையில் ஆட்சி செய்தவர் மோடி. கடந்த 2001ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி குஜராத் முதலமைச்சராக முதல்முறை மோடி பதவியேற்றார். அம்மாநில வளர்ச்சிக்கு அளப்பறிய பங்காற்றியதாக சொல்லப்படுகிறது. நாடு முழுவதும் குஜராத் மாடல் என்று பெயர் பெறும் அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தினார். இது தேசிய அளவிலான அரசியலில் மோடிக்கு முக்கியத்துவம் பெற்றுத் தந்தது.
Samayam Tamil PM Modi


இதையடுத்து 2007 மற்றும் 2012 ஆகிய சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்து சாதனை படைத்துள்ளார். அதன்பின்னர் 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் 14வது பிரதமராக பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் வென்று இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் மக்கள் சேவையில் மோடி இன்று(அக்டோபர் 7) 20வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

சுதந்திர இந்தியாவில் இப்படியொரு சாதனைப் படைத்த மோடி - வாஜ்பாயே தோத்துட்டார் போங்க!

அதுவும் இடைவெளியின்றி இத்தனை ஆண்டுகள் பொது வாழ்வில் இருந்தது மோடியின் வாழ்வில் புதிய மைல்கல் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி தனது ஆட்சியில் பல்வேறு சிறப்புமிக்க விஷயங்களை செய்து முடித்துள்ளார்.

இவை பாஜக மற்றும் தேச நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. இவற்றில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியது முக்கியத்துவம் வாய்ந்தது.

மேலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது, முத்தலாக் தடை, ஆத்மா நிர்பார் பாரத், சீனா உடனான எல்லைப் பிரச்சினையில் தக்க பதிலடி கொடுத்து வருவது, விவசாயத்துறையில் மாற்றம் ஏற்படச் செய்யும் வகையில் மூன்று வேளாண் மசோதாக்களை சட்டமாக்கியது உள்ளிட்டவை அடங்கும்.

அடுத்த செய்தி