ஆப்நகரம்

மோடிக்கு மோசமான நேரம்: கேரள முதல்வர் பினராயி உறுதி

கேரளா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என முதல்வர் பினராயி விஜயன் ஒப்புக்கொண்டுள்ளார்.

TNN 22 Jun 2017, 3:18 am
திருவனந்தபுரம்: கேரளா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என முதல்வர் பினராயி விஜயன் ஒப்புக்கொண்டுள்ளார்.
Samayam Tamil pm modi faced terror threat during kochi visit reveals kerala cm pinarayi vijayan
மோடிக்கு மோசமான நேரம்: கேரள முதல்வர் பினராயி உறுதி


கேரள மாநிலம் கொச்சியில், கடந்த 17ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவை துவக்கியது. தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்திற்கு வந்திருந்தார்.

கேரளா வந்திருந்த போது, அவர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி., சென்குமார் தெரிவித்திருந்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனும் பிரதமரின் வருகையை முன்னிட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உண்மை என்று கூறியுள்ளார். புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி கொச்சி வந்தபோது அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது உண்மையே. போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதால், அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன” என்று கூறினார்.

அடுத்த செய்தி