ஆப்நகரம்

சிறைவாசத்தில் ப.சிதம்பரம்... இன்று போல் என்றும் இருக்க வாழ்த்திய மோடி!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி இன்று பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Sep 2019, 8:32 pm
ஐ.என். எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21- ஆம் தேதி (ஆகஸ்ட் 21) சிபிஐயால் கைது செய்யப்பட்டார். தற்போது திகார் சிறையில் உள்ள அவர், தமது 74-ஆவது பிறந்த நாளை, கடந்த 16 -ஆம் தேதி (செப்.16) அங்கேயே கொண்டாடினார்.
Samayam Tamil mc


இந்த நிலையில், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ப.சிதம்பரத்துக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழில் அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், " உங்களின் பிறந்தநாளுக்கு என் இதயம்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை தந்து, இன்றுபோல் என்றென்றும் மக்களுக்கு சேவையாற்ற உங்களை ஆசீர்வதிக்கட்டும் " என பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.



தற்போதைய துன்புறத்தல் முடிந்தபின்... தமக்கு மோடி பிறந்தநாள் லாழ்த்து தெரிவி்த்துள்ளது குறித்து வியப்பு தெரிவித்துள்ள ப.சிதம்பரம், தற்போதைய துன்புறுத்தல் முடிந்த பிறகு, பிரதமரின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவவோடு உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " என் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி.


அவரது வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம். துரதிர்ஷ்டவசமாக மோடி அரசின் விசாரணைத துறைகள் அதற்கு தடையாக இருக்கின்றனவே?

தற்போது நடைபெறும் துன்புறுத்தல் முடிந்த பிறகு, பிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன்" என சிதம்பரம் கூறியுள்ளார்

அடுத்த செய்தி