ஆப்நகரம்

சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா தேர்வு!

சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் புதிய இயக்குனராக அலோக் வர்மாவை நியமிக்க, பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

TNN 19 Jan 2017, 8:20 pm
சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் புதிய இயக்குனராக அலோக் வர்மாவை நியமிக்க, பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
Samayam Tamil pm modi has approved the appointment of alok verma as cbi director
சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா தேர்வு!


தற்போது டெல்லி மாநகர போலீஸ் கமிஷனராக உள்ள அலோக் வர்மா, கடந்த 1979ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் சமீபத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர்கள், தலைவர்களை பாரபட்சம் பாராமல் கைது செய்து, பாராட்டுகளை பெற்றவர்.

அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் ஆதரவு அதிகாரிகள் பட்டியலில் முதன்மை இடத்திலும் அலோக் வர்மா உள்ளார். இதையடுத்து, டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில், அலோக் வர்மாவை, சிபிஐ.,யின் புதிய இயக்குனராக நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அலோக் வர்மா, அடுத்த 2 ஆண்டுகளுக்கு சிபிஐ இயக்குனராகச் செயல்பட பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்துள்ளார் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

PM Modi has approved the appointment of Alok Verma as CBI Director.

அடுத்த செய்தி