ஆப்நகரம்

பாஜக கூட்டணியில் குழப்பம்: சிராக் பாஸ்வானை கழட்டிவிட்ட மோடி

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சி இல்லையென பிரதமர் மோடி சிக்னல் கொடுத்திருக்கிறார்.

Samayam Tamil 28 Oct 2020, 8:18 pm

பிஹாரில் சட்டமன்ற பொதுத்தேர்தல் இன்று தொடங்கியது. முதற்கட்ட வாக்குப்பதிவு நாளான இன்று மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி போட்டியிடுகிறது.
Samayam Tamil சிராக் பாஸ்வானுடன் பிரதமர் மோடி


பாஜக கூட்டணி முதல்வர் வேட்பாளராக ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ் குமார் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்வின் மகனுமான தேஜஸ்வி யாதவ் போட்டியிடுகிறார்.

பாஜக கூட்டணியில் ஒரு தீராத சிக்கல் நீடித்து வந்தது. லோக் ஜனசக்தி தலைவரும், அண்மையில் காலமான மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகனுமான சிராக் பாஸ்வான் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் ஆதரவளிக்கிறார். ஆனால், நிதிஷ் குமாரை மிகத் தீவிரமாக எதிர்க்கிறார்.

பசுக்கள் மீது கை வைத்தால் அவ்வளவு தான்; முதல்வர் போட்ட அதிர்ச்சி உத்தரவு!

தனது இதயத்தை கிழித்து பார்த்தால் அதில் மோடி இருப்பார் என்று சிராக் பாஸ்வான் அண்மையில் கூறியிருந்தார். ஆனால், ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ் குமாரை கடுமையாக எதிர்த்து வருகிறார். பாஜக போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாத சிராக் பாஸ்வான், ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.

இது பாஜக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. மோடிக்கு சிராக் பாஸ்வான் அளிக்கும் ஆதரவால் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தது தேசிய ஜனநாயகக் கூட்டணி. இந்நிலையில், பாஜக கூட்டணியில் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இல்லை என பிரதமர் மோடி சிக்னல் கொடுத்திருக்கிறார்.

இன்று தர்பங்காவில் பாஜக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளை பட்டியலிட்டார். அதில் ஜனதா தளம், விகாஷீல் இன்சான் கட்சி, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகியவை இடம்பெற்றன. ஆனால் லோக் ஜனசக்தியை பற்றி அவர் பேசவில்லை.

இதனால் பிஹாரில் பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது கூட்டணியில் என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அடுத்த செய்தி