ஆப்நகரம்

பிரதமர் மோடி கேதார்நாத்தில் "ருத்ராபிஷேகம்"

உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கேதார்நாத் கோயிலில் "ருத்ராபிஷேகம்" செய்து வழிபாடு நடத்தினார்.

TNN 3 May 2017, 6:22 pm
கேதார்நாத்: உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கேதார்நாத் கோயிலில் "ருத்ராபிஷேகம்" செய்து வழிபாடு நடத்தினார்.
Samayam Tamil pm modi offer prayers and perform a rudrabhishek in kedarnath
பிரதமர் மோடி கேதார்நாத்தில் "ருத்ராபிஷேகம்"


பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அம்மாநிலத் தலைநகர் டேராடூன் விமான நிலையத்துக்கு இன்று காலை வந்தடைந்தார். அங்கு அவரை அம்மாநில ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

அங்கிருந்து தனது பயணத்தின் முதல்பகுதியாக, ஹெலிக்காப்டர் மூலம், இமயமலைப்பகுதியில் அமைந்துள்ளதும், சுமார் 11000 அடி உயரத்தில் அமைந்துள்ளதுமான புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு சென்றார். குளிர் காலத்தையொட்டி சுமார் ஆறு மாதகாலத்துக்கு மூடப்பட்டிருந்த அக்கோயில், பக்தர்களின் வழிபாட்டுக்காக தற்போது திறக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வருகையை முன்னிட்டு காலை 8.50 மணிக்கெல்லாம் கோயிலின் நடை திறக்கப்பட்டிருந்தது. பிரதமரின் ஹெலிக்காப்டர் இறங்குவதற்கு ஏற்றாற்போல், கோயிலின் அருகே ஹெலிபேட் அமைக்கப்பட்டிருந்தது. கோயிலின் நடை திறக்கப்பட்டதில் இருந்து அரை மணி நேரத்துக்கு பின்னர், அங்கு வந்த பிரதமர் மோடி, கேதார்நாத் கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டார். மேலும், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கேதார்நாத் சன்னதியில், "ருத்ராபிஷேகம்" செய்தும் அவர் வழிபாடு நடத்தினார்.

சுமார் 20 நிமிடங்கள் கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அவரைப் பார்பதற்காக வெளியே காத்திருந்த மக்களை சந்தித்து கையசைத்து உற்சாகம் கொடுத்தார். மேலும், கோயிலின் வெளியே காத்திருந்த கோயில் நிர்வாகிகள், பிரதமருக்கு சால்வை, புத்தகங்கள், ருத்ராக்ஷம் உள்ளிட்டவைகளை பரிசளித்தனர்.

தொடர்ந்து, ஹிமாலயன் சுனாமி என்று வர்ணிக்கப்படும், கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளப் பெருக்கின் போது, மலைப்பகுதியில் இருந்து உருண்டு வந்து, கேதார்நாத் கோயிலை பெரும் சேதத்தில் இருந்து காப்பாற்றிய, பீம்ஷிலா என பெயரிடப்பட்டுள்ள மிகப்பெரிய பாறையும் பார்வையிட்டார்.

அதன்பின்னர், அங்கிருந்து கிளம்பிச் சென்ற பிரதமர் மோடி, தனது பயணத்தின் ஒரு பகுதியாக ஹரித்வாரில் அமைந்துள்ள பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
PM Modi offer prayers and perform a Rudrabhishek in Kedarnath

அடுத்த செய்தி