ஆப்நகரம்

PM Modi: 8 கோடி பேரை கழட்டிவிட்ட பிரதமர் மோடி - போட்டுக் கொடுத்த சசி தரூர்!

பிரதமர் மோடி இந்திய மக்கள் குறித்து பேசுகையில் 8 கோடி பேரை தவிர்த்துவிட்டது வேதனையான விஷயம் என்று சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.

Samayam Tamil 7 Aug 2020, 10:58 am
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதையடுத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசுகையில், ராமர் கோயில் கட்டுவதற்காக பல நூற்றாண்டுகளாக பல்வேறு தலைமுறையினர் சுயநலமின்றி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு 130 கோடி இந்தியர்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் தியாகங்களுக்கு முன்னால் தலைவணங்குகிறேன்.
Samayam Tamil Shashi Tharoor PM Modi


இதன்மூலமே இப்படியொரு பிரம்மாண்டமான ராமர் கோயிலை கட்டி எழுப்பக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பேசினார். இந்த நிகழ்வை உலகம் முழுவதுமிருந்து ஏராளமான மக்கள் தொலைக்காட்சிகளில் கண்டுகளித்தனர்.

பூமி பூஜையில் மோடி அணிந்திருந்த மாஸ்க் - என்ன மாடல்னு கவனித்தீர்களா?

இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசும் போது, 130 கோடி இந்தியர்களை மட்டும் தான் சுட்டிக் காட்டினார்.

ஆனால் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தரவுகளின் படி, 2020ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவின் மக்கள் தொகை 1,38,00,04,385(சுமார் 138 கோடி) ஆகும். எனவே சிஏஏ/என்.ஆர்.சி நடவடிக்கைகளுக்கு பிறகு, இப்படி 8 கோடி இந்தியர்களை பிரதமர் மோடி தவிர்த்திருப்பது பலரையும் கவலையடைச் செய்துள்ளது.

அங்க ஒர்க் அவுட் ஆச்சு, இங்க மட்டும் ஏன் மிஸ்ஸாச்சு; மீண்டு வருமா பாஜக?

ஒருவேளை தவறுதலாக இவ்வாறு தெரிவித்திருந்தால் அதனை திருத்திக் கொள்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி