ஆப்நகரம்

ரொக்கமில்லா பரிவர்த்தனை: அசாம் அரசுக்கு பிரதமர் பாராட்டு

ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பாக செயல்படும் அசாம் மாநில அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் வானொலி உரையில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

TNN 25 Dec 2016, 1:49 pm
டெல்லி: ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பாக செயல்படும் அசாம் மாநில அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் வானொலி உரையில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil pm modi praises assam government for taking initiatives to promote cashless economy
ரொக்கமில்லா பரிவர்த்தனை: அசாம் அரசுக்கு பிரதமர் பாராட்டு


பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் ரொக்கமில்லா தீபாவளிக் கொண்டாட்டம், ரொக்கமில்லா பரிவர்த்தனை என பல விஷயங்கள் பற்றிப் பேசினார். மேலும், ஆண்டு நிறைவை முன்னிட்டு 2016ஆம் ஆண்டின் மறக்கமுடியாத நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.

அப்போது, நவம்பர் 8ஆம் தேதி அறிவிப்புக்குப் பிறகு ரொக்கமில்லா பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இந்தியாவில் 30 கோடி ரூ-பே (Ru-pay) அட்டைகள் உள்ளன. அவற்றில் 20 கோடி ரூ-பே அட்டைகள் ஏழைமக்களிடம் உள்ளன. இதனால் ரொக்கமில்லா பரிவர்த்தனை 200 முதல் 300 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அசாம் மாநிலம் இணைய பரிவர்த்தனை பற்றிய விழிப்புணர்வு பரவலாக அளிக்கப்படுகிறது. ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்ய ஊக்குவிக்க பல முயற்சிகளை எடுத்துவரும் அசாம் மாநில அரசுக்கு எனது பாராட்டுக்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி