ஆப்நகரம்

கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு: ஔவையாரை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பெருமிதம்

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்றும் நாட்டு மக்களிடையே மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில், 62ஆவது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசினார்.

Samayam Tamil 23 Feb 2020, 7:45 pm
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்றும் நாட்டு மக்களிடையே மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில், 62ஆவது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசினார்.
Samayam Tamil pm modi quotes tamil poetess avvaiyar in mann ki baat
கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு: ஔவையாரை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பெருமிதம்



ஔவையாரின் வரிகளை சுட்டிக்காட்டிய மோடி

அப்போது “கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு” என்ற தமிழ் புலவர் ஔவையாரின் வரிகளை மேற்கோள்காட்டி இந்தியாவின் பல்லுயிர்தன்மையும் இதுபோல்தான் என்று தெரிவித்த மோடி, இந்தியாவில் பல்லுயிரியல் என்பது மதிப்பு மிக்க பொக்கிஷம். அதை நாம் பாதுகாப்பது மட்டுமல்லாமல் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

105 வயதில் படிக்கும் பாகீரதி அம்மாள்

கேரளாவில் 10 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திய பாகீரதி அம்மாள், தனது 105 வயதில் மீண்டும் படிப்பை தொடங்கினார். தற்போது 75 சதவீத மதிப்பெண்களுடன் 4ஆம் நிலை தேர்வுகளை நிறைவு செய்த பாகீரதி அம்மாள் உத்வேகத்தின் ஆதாரம். அவருக்கு நான் எனது மரியாதையை செலுத்துகிறேன் என பிரதமர் மோடி பேசினார். அத்துடன், தேர்வு எழுதவுள்ள மாணவ மாணவிகளுக்கும் தமது வாழ்த்துகளையும் மோடி தெரிவித்துக் கொண்டார்.

புதிய இந்தியாவில் பெண்கள்

புதிய இந்தியா பழைய அணுகுமுறையோடு பயணிக்க விரும்பவில்லை. புதிய இந்தியாவில் நமது சகோதரிகளும், தாய்மார்களும் முன்னேறி செல்வதுடன், சவால்களை தங்களது கைகளில் எடுத்து கொள்கின்றனர். பெண்களின் இத்தகைய செயல்பாட்டால் சமூகம் முழுவதிலும் ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தை காண முடிவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் அறிவியல் ஆர்வம்

அறிவியல், தொழில்நுட்பம் குறித்து நமது இளைஞர்கள் ஆர்வத்துடன் பேசி வருகின்றனர். இளைஞர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் ராக்கெட் ஏவப்படும் போது அதை 10 ஆயிரம் பேர் நேரில் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் அரங்கம் அமைக்கபப்ட்டுள்ளது.

அடுத்த செய்தி