ஆப்நகரம்

ராய்கட் பேருந்து விபத்து: மோடி, ராகுல் இரங்கல்

டெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆறுதல் கூறியுள்ளானர்.

Samayam Tamil 28 Jul 2018, 4:50 pm
டெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆறுதல் கூறியுள்ளானர்.
Samayam Tamil Rahul-Modi


டாக்டர் பாலாசாஹேப் சவந்த் கொங்கன் கிரிஷி வித்யாபீத் வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 40 ஊழியர்கள் டோபாலியில் இருந்து மகாபலேஷ்வருக்கு பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளனர்.

ராய்கட் மாவட்டத்தில் அம்பேனலி கட் மலைப் பாதையில் பயணித்த அவர்களது பேருந்து சனிக்கிழமை மதியம் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அப்பகுதியில் மீட்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். காயமடைந்தவர்களை அப்பகுதி மக்களே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

குறுகலான வளைவில் பேருந்து திரும்பும் போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது.
இந்நிலையில் இந்த விபத்தினால் உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில், “ராய்கட் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களைப் பற்றி அறிந்தது வலியைக் கொடுக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என் ஆறுதலைக் கூறிக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
“மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்டில் நடத்த பேருந்து விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. அதிகம் பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தேவையான உதவியைச் செய்ய கேட்டுக்கொள்கிறேன்.” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி