ஆப்நகரம்

பிரதமர் மோடிக்கு UAE நாட்டின் உயரிய விருது!

மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு, ஐக்கிய அரபு நாட்டின் மிகஉயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Aug 2019, 8:56 pm
பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் சையத் (Order of Zayed) விருது வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil modi in uae


பிரதமர் மோடி மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு நாட்டிற்குச் சென்றுள்ளார். இரண்டாவது நாளான இன்று, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், ரூபே அட்டையை பிரதமர் மோடி அங்கு அறிமுகம் செய்தார்.

இதையடுத்து பிரதமர் மோடிக்கு ‘ஆர்டர் ஆஃப் சையத்’ என்ற உயரிய விருதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு வழங்கியது. UAE நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும், ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானின் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரொக்கமில்லா டிஜிட்டல் பணப்பரிவர்த்னையை ஊக்குவிக்கும் வகையில், ரூபே கார்டை பூடான், நேபாள ஆகிய நாடுகளிலும் பிரதமர் மோடி அறிமுகம் செய்திருந்தார். தற்போது அதே போன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிலும் அறிமுகம் செய்துள்ளார்.

அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சையதுவையும் பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருநாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை மேம்படுத்துதல், வரத்தக, கலாச்சார ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றியும் ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்திற்குப் பிறகு பிரதமர் மோடி பஹ்ரைன் சென்றார். அவரை அபுதாபி இளவரசர் வழியனுப்பினார்.

அடுத்த செய்தி