ஆப்நகரம்

மம்தா என்னை புண்படுத்தி விட்டார்: பிரதமர் மோடி வேதனை!

மம்தா பானர்ஜியின் கொள்கைகள் மேற்குவங்காளத்தை அழித்து விட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்

Samayam Tamil 25 Dec 2020, 5:09 pm
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினமான இன்று, பாஜக சார்பில் நல்லாட்சி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2ஆயிரம் வீதம் ரூ.18,000 கோடியைப் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார். இந்த நிகழ்வின்போது, 6 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடினார்.
Samayam Tamil பிரதமர் மோடி
பிரதமர் மோடி


அப்போது பேசிய பிரதமர் மோடி, புதிய வேளாண் சட்டங்கள் பற்றியும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறை கைவிடப்படும் என்றும் விவசாயிகளிடம் எதிர்க்கட்சியினர் தவறான தகவலைப் பரப்புவதாக குற்றம் சாட்டினார். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என உறுதியளித்த பிரதமர், வேளாண்துறைச் சீர்திருத்தங்களால் விவசாயிகள் விளைபொருட்களை எங்கும் யாருக்கும் விற்க முடியும் என்பதால் நல்ல விலை கிடைக்கும் என தெரிவித்தார்.

இடைத்தரகர் இல்லாமல், தரகு இல்லாமல் நேரடியாக விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, முந்தைய அரசு விவசாயிகளுக்கு அளித்த உறுதிமொழிகளை மறந்துவிட்டதாகவும், முந்தைய அரசின் கொள்கைகளால் ஏழைகள் மேலும் ஏழைகளானதாகவும் குற்றம் சாட்டினார்.

2020ன் அரசியல் அதிரடிகள்; இந்தியாவை புரட்டி போட்ட நிகழ்வுகள்!

மத்திய அரசின் திட்டப் பயன்கள் விவசாயிகளுக்குச் சென்று சேர மம்தா பானர்ஜி அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டிய பிரதமர், மத்திய அரசு திட்டங்களை மேற்கு வங்க அரசு அனுமதிக்காததால், அவற்றின் பயன்களை வங்காள விவசாயிகள் அடைய முடியவில்லை. மம்தா பானர்ஜியின் கொள்கைகள் வங்காளத்தை அழித்து விட்டது. மம்தாவின் நடவடிக்கைகள் என்னை புண்படுத்தி விட்டது என்றும் வேதனை தெரிவித்தார்.

அடுத்த செய்தி