ஆப்நகரம்

விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்..!!

விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக ஒரு கோடி விவசாயிகளுக்கு முதல் தவணைக்கான ரூ. 2 ஆயிரம் பணம் வழங்கப்படுகிறது.

Samayam Tamil 24 Feb 2019, 6:33 am
குறுவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று உத்தரப் பிரதேசம் மாநிலத்திலிருந்து தொடங்கி வைக்கிறார்.
Samayam Tamil விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம்: இன்று தொடக்கம்


கடந்த பிப்.1ம் தேதி 2019-20ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வரும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, இதில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

அதில், பிரதமர் கிஷான் திட்டம் மூலம் இரண்டு ஹெக்டேர் நிலப்பரப்பு அல்லது அதற்கு குறைவாக நிலம் பெற்ற 12 கோடி சிறு விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ரூ. 75,000 கோடி பணம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிகழாண்டில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ. 2 ஆயிரம் வீதம் என மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூ. 6 ஆயிரம் வரவு வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்கலை சந்தித்த மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், சிறுவிவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

உத்தரப் பிரதேசம், கர்நாடகம் உட்பட மொத்தம் 14 மாநிலங்களைச் சேர்ந்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு முதல் தவணைக்கான தொகை இன்று வழங்கப்படும். அடுத்த 2 அல்லது மூன்று நாட்களில் 28 மாநிலங்கள் மற்ற்ம் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த மேலும் ஒரு கோடி விவசாயிகளுக்கு முதல் தவணைத் தொகை ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.

இந்த தொகை அனைத்தும், தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த திட்டத்திற்கு தகுதியான விவசாயிகளின் விவரங்கள் மத்திய அரசின் இனையதளம், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.

அடுத்த செய்தி