ஆப்நகரம்

இந்தியாவின் கலாசாரம் உலகத்தின் கவனத்தை ஈர்க்கிறது: பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவின் கலாசாரம் என்றும் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பவையாக உள்ளன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Samayam Tamil 29 Nov 2020, 2:47 pm
'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, '' நமது பாரம்பரியமிக்க மற்றும் விலை மதிப்புமிக்க மரபு சின்னங்களும் அடையாளங்களும் கடத்தப்படுவதை தடுப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடத்தி செல்லப்பட்டவைகளை மீட்டு கொண்டு வருவதில் இந்தியாவின் முயற்சிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன.
Samayam Tamil modi


கடந்த சில ஆண்டுகளாக பல சிலைகளையும், கலைப்பொருட்களையும் மீட்டு கொண்டு வருவதில் நாம் வெற்றியடைந்து வருகிறோம்.பழமையான தேவி அன்னபர்னா சிலை கனடாவில் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வாரணாசியில் கடத்தப்பட்ட அன்னபூர்னா சிலையை மீட்டு இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் வாயிலாக பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களை தொடர்பு கொள்ள முடிந்தது. நாட்டின் இளைஞர்கள் மத்தியில் இருப்பது, புத்துணர்வு, புதுசக்தியை அளிக்கும் வகையில் ஒரு நல்ல அனுபவமாக உள்ளது. பிறருக்கு பதக்கம் கிடைப்பதை பார்க்கும் பள்ளி பருவ மாணவர்களிடம் கனவுகள் உதயமாகும், தன்னம்பிக்கை பிறக்கும்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்: பிரதமர் மோடி தகவல்!

இந்தியாவில் விவசாயம் மற்றும் அதோடு தொடர்புடையவற்றுடன் ஒரு புதிய பரிணாமம் இணைகிறது. பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட விவசாய சட்டங்கள், விவசாயிகள் வாழ்வில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. விவசாயிகள் கோரிக்கைகள் இன்று நிறைவேறியிருக்கன்றன'' என இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி