ஆப்நகரம்

பெண்கள்தான் எனது பலம்: மோடி பெருமிதம்!

பாஜகவின் தொடர் வெற்றிக்கு பெண்களின் ஆதரவுதான் காரணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Nov 2020, 11:46 pm

பீஹார் சட்டமன்ற தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதையடுத்து பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Samayam Tamil நரேந்திர மோடி


இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் பாஜக தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், “பீஹார் தேர்தல் முடிவுகள் ஸ்பெஷலானது. தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ரகசியம் ‘அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை’. இந்த மந்திரம்தான் பிஹாரில் வெற்றிபெற வைத்துள்ளது. பீஹாரில் உண்மை வென்றுள்ளது.

அந்த விஷயத்தை பார்த்ததுமே டிவி ஸ்விட்ச் ஆஃப் - செம காண்டான லாலு பிரசாத்

இது தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. பீஹார் இளைஞர்களுக்கும் அவர்களது கனவுகளுக்கும் கிடைத்த வெற்றி. பீஹார் விவசாயிகளுக்கும், பெண்களுக்கும் கிடைத்த வெற்றி. பாஜகதான் ஜனநாயகத்தின் வீடு என்பதை மக்கள் காட்டியுள்ளனர்.

பாஜகவுக்கு சைலண்டாக வாக்களிப்பவர்கள் இருப்பதாக சில பேச்சுகள் எழுகின்றன. பாஜகவுக்கு ஸ்பெஷலான சைலண்ட் வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்கள் இந்தியாவின் தாய்மார்களும், சகோதரிகளும் ஆவர். ஒவ்வொரு தேர்தலிலும் பெண்கள் நமக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். கிராமப்புறங்களாக இருந்தாலும், நகர்ப்புறங்களாக இருந்தாலும், பாஜகவுக்கு சைலண்டாக வாக்களிப்பது பெண்களே.

குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளே ஜனநாயகத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல். ஆனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் இருப்பது வருத்தத்திற்குரியது. பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சியும் (காங்கிரஸ்) ஒரே குடும்பத்திற்குள் சிக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி